விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சிறுமிகளும், பெண்களும் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசு தடுக்ககோரி பச்சப்பன் பச்சோ அந்தோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை (09.12.2009) விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதனால், நீதிபதிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் இது குறித்து கூறியதாவது, உலகின் புராதன தொழிலான விபசாரத்தை சட்டப்பூர்வமாக தடுப்பது கடினம் என்று சொல்கிறீர்கள். உங்களால் விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் நீங்கள் (மத்திய அரசு) சட்டப்பூர்வமாக ஆக்கக் கூடாது? அப்படி சட்டப்பூர்வமாக ஆக்கினால், அந்த தொழிலை உங்களால் கண்காணிக்க இயலும். அதில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வளிக்க முடியும். மேலும் அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் தர இயலும்.

பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதை தடுக்க அதை சட்டப்பூர்வமாக ஆக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். தண்டனை அளிப்பதன் மூலம் உலகில் எங்குமே விபசாரத் தொழிலை தடுக்க முடியவில்லை.

ஏதாவது ஒரு வகையில் இந்த உலகில் விபசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எங்குமே சட்டப்பூர்வமாக தடுக்கமுடியவில்லை. எனவே, நீங்கள் ஏன் அதை சட்டப்பூர்வமாக ஆக்க கூடாது?... என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், இதை கவனத்தில் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், நீதிபதிகள் இருவரும் கூறுகையில், "நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி பற்றி நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால், நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து தற்போது 37 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 5, 6 குடும்பங்களின் வளர்ச்சியை வைத்து, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து இருப்பதாக கருதக் கூடாது. ஒழிக்கப்படவேண்டிய வறுமை நிலை காரணமாகத்தான் சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவதும், விபசாரத் தொழில் செழிப்பாகவும் நடப்பதற்கு முக்கிய காரணம்'' என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்!!


ஹோண்டா : ஹோண்டா நிறு​வ​னத்தின் 110 சிசி திறன் கொண்ட நியூ ஏவி​யேட்​டர் ஸ்கூட்​டர் சென்​னை​யில் அறி​மு​கப்​ப​டுப்பட்டது. இந்த புதிய வகை ஸ்கூட்டரை அந்நிறு​வ​னத்​தின் துணைத் தலை​வர் அனு​பம் மொஹிண்ட்ரூ அறி​மு​கப்​ப​டுத்​தி​னார். ஏற்​க​னவே அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டுள்ள ஏவி​யேட்​ட​ரைக் காட்​டி​லும் 15 சத​வீ​தம் கூடு​தல் செயல் திறன் கொண்​டது நியூ ஏவியேட்டர் ஸ்கூட்டர். எரி​பொ​ருளை சிக்​க​னப் படுத்தும் இந்த ஸ்கூட்டரின் விலை முறையே ரூ. 43,938 மற்​றும் ரூ. 48,938 ஆகும். ஐந்து கண்​க​வர் வண்​ணங்​க​ளில் இவை வெளி​வந்​துள்​ளன.​ ​ டெலஸ்​கோப்​பிக் சஸ்​பென்​ஷன்,​ முன்​புற டிஸ்க் பிரேக்,​ 20 லிட்​டர் கொள்​ள​ளவு கொண்ட பெட்டி,​ டஃப் அப் டியூப், கோம்பி-​பிரேக் சிஸ்​டம்,​ பரா​ம​ரிப்பு தேவைப்​ப​டாத பேட்​டரி,​ விஸ்​கோஸ் ஏர் ஃபில்​டர் ஆகி​யன இதில் புதி​தாக சேர்க்​கப்​பட்​டுள்ள சிறப்​பம்​சங்​க​ளா​கும். அ​டுத்த ஆண்டு ஏப்ர​லில் அமல்​ப​டுத்​தப்​பட உள்ள பாரத்-​3 சுற்​றுச் சூழல் விதி​மு​றைக்​கேற்ப சான்​றி​தழ் பெற்ற வாக​ன​மாக இது வெளி​வந்​துள்​ளது.


டி.வி.எஸ்: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய வகை பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. புதிய பைக் மற்​றும் ஸ்கூட்​டரின் தனித்துவம் என்னவென்றால், கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் கியர்​கள் கொண்டு இருப்பதே ஆகும். டிவி​எஸ் ஜைவ்...டிவி​எஸ் ஜைவ் மோட்​டார் சைக்​கிள் கிளெட்ச் இல்​லா​மல் தானாக இயங்​கும் வகை​யில் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. பைக் எந்த கிய​ரில் சென்று கொண்​டி​ருந்​தா​லும் உட​ன​டி​யாக நியூட்​ர​லுக்​குக் கொண்டு வர முடி​யும்.

கியரை படிப்​ப​டி​யா​கக் குறைத்து நியூட்​ர​லுக்கு வர வேண்​டிய அவ​சி​யம் இல்லை. பைக்கை எந்த கிய​ரில் நிறுத்​தி​னா​லும்,​ அதே கிய​ரில் வண்​டியை தொடர்ந்து இயக்க முடி​யும். ​ 110 சிசி என்​ஜின்,​ 12 லிட்​டர் கொள்​ள​ளவு உள்ள பெட்​ரோல் டேங்க் ஆகி​ய​வற்​று​டன் கூடு​த​லாக பைக் இருக்​கை​யின் அடி​யில் பொருள்​களை வைத்​துக் கொள்ள இட வசதி உள்​ளது. இதில் ஒரு குடை,​ தண்​ணீர் பாட்​டில்,​ ஃபைல் ஆகி​ய​வை​களை வைத்​துக் கொள்​ள​லாம். இதன் விலை ரூ. 41 ஆயி​ர​மா​கும்.டிவி​எஸ் வீகோ 110 சிசி என்​ஜின்,​​ 12 அங்​குல அள​வுள்ள அலாய் வீல்​கள் பொருத்​தப்​பட்​டுள்ள இந்த ஸ்கூட்​டர் குடும்​பத்​தில் உள்ள அனை​வ​ரும் எளி​தில் ஓட்​டக் கூடிய விதத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்கூட்​ட​ரின் பின்​பு​றத்​தில் பெட்​ரோல் டேங்க் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஐந்து லிட்​டர் கொள்​ள​ளவு பெட்​ரோல் டேங்க்,​செல்​போனை சார்ஜ் செய்​யும் வசதி உள்​ளிட்​டவை இதில் உள்​ளன. கருப்பு,​ கரு​நீ​லம்,​ கேப்​பச்​சீனோ ப்ரெüன்,​ சில்​வர் உள்​ளிட்ட ஐந்து நிறங்​கள் கொண்ட இதன் விலை ரூ. 42 ஆயி​ரம் ஆகும்.

என்பீல்டு: டில்லியில் கிளாசிக் 350 ராயல் என்பீல்டு பைக் அறிமுகப் படுத்தப் பட்டது. எஜ்சர் குரூப் எம்.டி., மற்றும் சி.இ.ஓ., சித்தார்த் லால் மற்றும் பைக் வடிவமைப்பாளர் சிக்கா ஆகியோர் பைக்கை அறிமுகப் படுத்தினர்.

பஜாஜ்: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.

இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.


இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ‌ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின.


இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை ‌பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.

ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது.

படிக்கட்டு பயணங்கள்!!!

Posted by மௌனமான நேரம் Saturday, 5 December 2009 0 comments

படிக்கட்டு பயணங்கள்!!!





போலீஸ் பாதுகாப்பில் படிக்கட்டு பயணங்கள்!!

இப்போ என்ன பண்ணுவீங்கோ!!


தமன்னா!!

Posted by மௌனமான நேரம் 0 comments

தமன்னா!!

தமிழ் திரையுலகமே தமன்னா பக்கம் சாய்ந்திருக்கிறது. சொல்லிக்கிற மாதிரி அப்படி ஒன்றும் அழகு இல்லை என்று ஆரம்பத்தில் ஓரங்கட்டப்பட்ட தமன்னாவுக்கு இப்போ செம மவுசு.

ஹூரோக்களும், இயக்குநர்களும், புரடியூசர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமன்னாவை புக் பண்ணுகிறார்கள்.

அதுமட்டுமல்ல சின்ன இடைவெளி கிடைத்தாலும் தமன்னா பற்றி பெரிய புராணம் பாடிவிடுகிறார்கள். படிக்காதவன் பட ஆடியோ வெளியீட்டின் போது சேரனும், அமீரும் மாறி மாறி அவரின் பக்கத்தில் நின்றுகொண்டார்கள்.

"எனக்கு தமன்னாவ ரொம்ப பிடிக்கும். நான் அவரோட அழகுல மயங்குறேன். அதுக்காக நான் அவர காதலிக்கிறேன்னு எழுதிடாதீங்க" என்று ஜெயம்ரவி போட்டுத்தாக்கினார்.

தில்லாலங்கடி பட விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், தமன்னாவின் அழகு சூப்பர் என்றார். இப்போது பையா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஷங்கர், "தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்" என்றார்.

ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....

நடிகை நயன்தாரா ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். முன்பெல்லாம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் அநியாயத்துக்கு நெருக்கம் காட்டி வந்த நயன்தாரா பிரபுதேவாவுடனான லவ்வுக்கு பிறகு நெருக்கத்துக்கு நோ சொல்லி விடுகிறாராம். தற்போது ஆர்யா ஜோடியாக நடி்தது வரும் பாஸ்கர் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க முடியாது என்று கறாராக கூறி விட்டாராம்.

காபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா!

புது நிகழ்ச்சிகளில் வழங்குவதில் புதுமை படைத்து வரும் விஜய் டி.வியில், "காபி வித் அனு சீசன் 3' மீண்டும் இடம் பெற துவங்கி உள்ளது. "அணு அள​வும் பய​மில்லை' சீசன் ஒன்றை முடித்​து​விட்டு,​ மீண்​டும் இந்​நி​கழ்ச்​சிக்​குப் பொறுப்​பேற்​கி​றார் அனு​ஹா​சன். முதல் வார சிறப்பு விருந்​தி​னர் நயன்​தா​ரா​வாம். "கலை' முதல் "காதல்' வரை மனம் விட்டு பேச தயாராகி வருகிறாராம் நயன்தாரா. விரைவில் விஜய் டி.வி.,யில் நயன்தாராவை எதிர்பார்க்கலாம்.

சந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அறிமுகம்

சென்னையில் நியூ மெர்சிடிஸ் பென்ஸ் ஈ350 சி.டி.ஐ., ப்ளூ எபியன்சி கார் அறிமுகப் படுத்தப் பட்டது. குறைந்த எரி பொருள் செலவில், புதிய இ350 கார் அறிமுகப் படுத்தப் பட்டது. டீசலில் இயங்க கூடிய இந்த காரை பிரபல சொகுசு கார் நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஜ் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன் மதிப்பு 45 லட்ச ரூபாயாகும். இதனை, மெர்சிடிஸ்-பென்ஜ் இந்தியா தலைமை செயல் அதிகாரி வில்பிரைட் ஆல்பர் அறிமுகப் படுத்தினார். இந்நிறுவனம், ஏற்கனவே அறிமுகப்படுத்திய இதே ரக கார்களை விட, இ350 ரக காருக்கு 13 விழுக்காடு எரிபொருள் குறைவாக செலவழியும். இதன் மற்றொரு சிறப்பம்சம் சுற்றுச் சூழல் மாசுபடுத்தாத தன்மையாகும்.


கோல்கட்டாவில் புதிய இன்டிகா மான்ஷா கார் அறிமுகப் படுத்தப் பட்டது. இதனை டாடா மோட்டார்ஸ் தலைவர் ( கார் உற்பத்தி குழு) நிதின்செத், மாடல்களுடன் அறிமுகம் செய்து வைத்தார்.



மும்பையில் பிரிமியர் ரியோ கார் அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் காம்பாக்ட் டீசல் மினி-எஸ்.யு.வி.,வை அறிமுகப் படுத்தி வைப்பவர் பிரீமியர் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மைதிரியா தோஷி.

எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!

ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு என்ற கட்டணத்தில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.


நிறுவனத்தின் தமிழகம்,கேரள தலைவர் வி.ஜி.சோமசேகர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திட்டங்களை அறிவிக்கிறோம். எங்களிடம் மறைமுக கட்டணம் இல்லை. எஸ்.எம்.எஸ்., உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்கிறோம்.


சி.டி.எம்.ஏ., - ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை, மாதம் 11 ரூபாய் செலுத்தி பெறலாம். உள்ளூர், ரோமிங் என எந்த நெட்வொர்க்கிற்கு மெசேஜ் அனுப்பினாலும் இதே கட்டணம் தான். ரிலையன்சிற்கு நாடு முழுவதும் சொந்தமாக டவர், கேபிள் இருப்பதால் எந்த போட்டியையும் சமாளிப்போம், என்றார்.


நன்றி: தினமலர்

இந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி!

வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.

ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Widget By Devils Workshop

வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா?