
என் குழந்தையின் கேள்விகளும் பதில்களும்...
*ஒரு நாள் எங்கள் திருமண போட்டோவை பார்த்து விட்டு அழ ஆரம்பித்து விட்டாள். சமாதானம் செய்து
நான் : என்னடா ஆச்சி?
அவள்: உன் கல்யாணத்துக்கு நீ என்னை ஒரு போட்டோ கூட எடுக்கலை .
நான்: அப்போ நீ இல்லைடா.
அவள்: அப்போ நீங்க ரெண்டு பெரும் நான் இல்லாமலே கல்யாணம் பண்ணிட்டீங்களா?
நான்: !"£$%
(கல்யாணம் பண்ணினதால தாண்டிம்மா நீயே வந்தே!!)
-----------------------------------------------
*சாப்பாடு கொடுத்து ரொம்ப நேரம் ஆகியும் சாப்பிடவே இல்லை. இரண்டு தடவை சொல்லி பார்த்தேன். அப்படியும் விளையாடி கொண்டே இருந்தாள். என்க்கு கோவம் வந்துவிட்டது.
நான்: (கோபமாக) உனக்கு எதனை தடவை சாப்பிடுன்னு சொன்னேன் ?
அவள்: 2 டைம்ஸ்.
நான்: (சிரிப்பை அடக்கிக்கொண்டு) ஓகே. இன்னும் எதனை தடவை சொல்லணும்.
அவள்: 1 டைம்.
-----------------------------------------------------
*ஒரு நாள் என்னை ஆவலுடன் விளையாட கூப்பிட்டாள்.
நான் :சரி என்ன விளையாடலாம் .
அவள்: நீங்க ரெண்டு பெரும் டாடி மம்மி யா நடிங்க. நான் பேபி யா நடிக்கறேன்.
நாங்கள்: !"£$%..
---------------------------------------------------
இரவில் தூங்க போகும் முன்பு தீவிர யோசனையில் இருந்தாள்.
நான்: என்ன யோசிக்கறே?
அவள்: நைட் என்ன ட்ரீம் பண்ணலாம்னு யோசிக்கறேன். பர்பி... வின்னி தி பூ ,டோற... நிறைய இருக்கு chose பண்ணவே முடியலை...
-----------------------------------------------------
காலையில் எழுப்பினேன்...
நான் : ரொம்ப லேட் ஆச்சி எழுந்திரு...
அவள்: நான் இன்னும் ட்ரீம் முடிக்கலே. முடிச்சிட்டு எழும்பறேன் .
:)
-------------------------------------------------------










