தோழியா... காதலியா... அன்பே!!!

Posted by மௌனமான நேரம் Sunday, 5 July 2009


சரவணன் க்கு 5 மணிக்கி இந்தியா க்கு flight .அம்ஸ்டேர்டம் ஏர்போர்ட் இல் காத்திருக்கிறான். 3 வருடத்திற்கு பிறகு இப்போது தான் இந்தியா போகிறான். மனைவி லட்சுமி யும் , மகன் சரசு வும் முந்தைய வாரம் போய்விட்டார்கள். இன்னும் boarding க்கு 3 மணி நேரம் இருக்கிறது. சரி பொழுது போக்கலாம் என்று பக்கத்தில் ஒரு duty free ஷாப் க்குள் நுழைந்தான். ' barbie dolls half price' 'offer ends today' என்று போட்டிருப்பது பார்த்து அதை நோக்கி போனான். சரசு வுக்கு பார்பீ பொம்மை என்றால் கொள்ளை பிரியம். ஏற்கனவே 4,5 வைத்திருந்தாலும், என்ன வேண்டும் என்று கேட்டால் பார்பி என்று தான் இன்னும் சொல்வாள். அப்படி ஒருமோகம் அதன் மேல. குழந்தையை நினைத்து மெல்லிய புன்னகை அரும்பியது அவன் உதடுகளில்.

அவனது என்ன ஓட்டங்கள் திடீரென்று சடன் பிரேக் போட்டது. 'அது யார்.... ???'..
ஒரு நிமிடன் அவன் உடலெங்கும் ஒரு உஷ்ணம் பரவியது. சந்தேகமே இல்லை அது வினிதா தான். அவன் வினி..

தடைகளை தாண்டி அவன் எண்ண குதிரை பத்து வருடதிற்கு பின்னே ஓடியது. அவனும் வினியும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு வகுப்பில் இருந்தார்கள். அவள் அப்படி ஒரு அழகு.

'நீ வெயிலில் போகும்போது
உன்னை பார்க்க கண் கூசியதால்
திரும்பி சூரியனை பார்க்கிறேன்...

உன்னை அமாவாசை இருளில் பார்த்தேன்
எனக்கு இப்போது தான் புரிகிறது..
அமாவாசை அன்று ஒரு நிலவு
மீதி இரவில் இரண்டென்று...

பக்கத்து வீட்டு தாய்
நிலாநிலா ஓடி வா என்று கூறி சோறூட்டினாள்
நிலத்தை காட்டி..
அங்கு நோக்கினேன்... நீ...
'

நான்கு வார்த்தை சேர்த்து எழுத தெரியாத சரவணன் எழுதியது தான் இது. இதை விட அழகாக அவன் நண்பர்கள் பலர் அவளுக்காக எழுதியிருப்பது அவனுக்கு தெரியும்.

ஆனால் வேறு யாருக்குமே கிடைக்காத ஒன்று அவனுக்கு கிடைத்தது.. அவளது நட்பு... அவள் காலை எழுந்திருபதிலிருந்து இரவு தூங்குவது வரை முழு நேரமும் அவனுடன் தான் இருப்பாள். ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அவனிடம் முதலில் சொல்லா விட்டால் அவளுக்கு தலையெவெடிதுவிடும்.. அவனும் நல்ல நேரம் பார்த்து தான் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தான்.. அவன் கெட்ட நேரமோ என்னவோ அந்த நல்ல நேரம் வரவே இல்லை. இருவரும் கடைசி வருடம் படிக்கும்போது இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று ஒரு வழியாக சொல்லிவிட்டான்.

அவள் ... 'சரவ்... என்னால் உன்னோட தோழியா தான் இருக்க முடியும். உன்னை வேறு எதுவாவுமே என்னால் பாக்க முடியாது... சாரி.. ' என்றாள். அதன் பிறகு அவன் அவளுடன் பேசவில்லை. அவனால் அவளை தோழியாக பார்க்க முடியவில்லை. இரண்டு தடவை தற்கொலைக்கு கூட முயன்றான்.. எதோ அதிஷ்ட வசமாக தப்பினான். பிறகு... பெற்றோர் ஒரே பையன் நீ இப்படி பண்ணலாமா என்று அழுது... பிறகு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அம்மா உடல் நல குறைவு... பல இண்டேர்விஎவ்கள் ... நல்ல சாப்ட்வேர் கம்பனியில் வேலை... திருமணம்.. குழந்தை... கால ஓட்டத்தில் எல்லாமே மறதுவிட்டிருந்தது... ம்ம்ம்...

பயணிகளை விமானத்தில் நுழைய அறிவிப்பு கேட்டு நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்வுக்கு வந்தான். பாஸ்போர்ட் செக் முடிந்து அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான். ஜன்னல் ஓர இருக்கை. அருகில் உள்ள இருக்கையில்...... வினிதா.... இதை அவன் எதிர்பார்கவே இல்லை..

'சரவணன்??'
'எஸ்! வினிதா??'
'எப்படி இருக்கீங்க?? சர்ப்ரைஸ்.. '...வாடா போடா என்று நிமிஷத்துக்கு நூறு முறை சொல்லும் வினி..
'டூஇங் கிரேட்!! நீங்க??' ..வினி.. வினி.. என்று உருகும் சரவணன்..
'நல்லா இருக்கேன்..'

அவள் கணவன் குழந்தை பற்றி சுருக்கமாக சொன்னாள்.
அவனும் மனைவி குழந்தை பற்றி சொன்னான்...

அதன் பிறகு அவன் கண்ணயர்ந்தான்.. அவன் எதோ படம் பார்த்து கொண்டிருந்தாள்..

அவன் மனதில் ஒரு சின்ன சலனம் கூட இல்லை. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. தான் யாருக்காக இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தோமோ அவள் அருகில் இருக்கிறாள்.. கோபம்.. விரோதம்... ஆசை.. அழுகை... எதுவுமே இல்லை... சொல்ல போனால் மனம் தெளிந்த நீரோடை போல ரொம்பவுமே அமைதியாக இருந்தது... அவளிடம் பேச வேண்டும் என்று கூட தோன்றவில்லை... இப்போது அவள் அவனுக்கு தோழியா... காதலியா.. தெரியவில்லை... பத்து வருடம் செய்த வைத்தியமா இது?? காலம் இப்படி ஒரு மருந்தா??? அன்று தான் பைத்தியம் போல் அலைந்ததை நினைத்தால் கொஞ்சம் வியப்பாக கூட இருந்தது...

'உயிர்... அதை எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன்.. ஒரு வேளை அப்போது செத்திருந்தால்.... வாழ்வில் எவ்வளவோ இழந்திருப்பேன்... '

'நேற்று தேவை என்றது இன்று தேவை இல்லை...
நேற்று வாழ்கை என்றது இன்று வாழ்கை இல்லை..
நேற்று உயிர் என்றது இன்று உயிர் இல்லை.....'

அந்த ஒரு நிமிடத்தில் புரியாதது அதை கடந்து வந்த உடன் புரிகிறது..

விமான நிலையத்தில் சரசு வும் லட்சுமியும் காத்திருந்தார்கள்.... தன்னை அறியாமல் அவன் மனதில் மகிழ்ச்சி புகுந்தது..

'ஒரு வாரம் ஆச்சி பாத்து... ' குழந்தை ஓடி வந்து கட்டி கொண்டாள். மனைவி 'ரொம்ப டயெர்ட் எ இருக்கீங்க'....

'இவர்களை பிரிந்து எப்படி ஒரு வாரம் இருந்தேன்....'



2 பின்னூட்டங்கள்

  1. கலையரசன் சொன்னது:
  2. //'உயிர்... அதை எவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டேன்.. ஒரு வேளை அப்போது செத்திருந்தால்.... வாழ்வில் எவ்வளவோ இழந்திருப்பேன்... '//

    அப்படிதான் எல்லோரும் நினைகிறாங்க.. ஆனா போயிட்டா நினைக்க முடியாது!!

     
  3. ஜெகநாதன் சொன்னது:
  4. அருமை! பழைய காதலி பக்கத்தில்-ன்னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா, பின்னூட்டங்களா பிச்சுகிட்டு வந்து ​சேர்ந்திருக்கும். கடைசி வரி நெகிழ்வு!

     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Widget By Devils Workshop