அவசியம் இல்லாமல், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அலையும் அரசியல் தலைவர்கள் மற்றும் வி. ஐ. பி - களுக்கு மத்தியில் சோம்நாத் ஒரு ஜென்டில்மேன்!.மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்து வரும் சோம்நாத், தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டு நலனில் அக்கறையுள்ள சோம்நாத் சாட்டர்ஜி உண்மையில் ஒரு ஜென்டில்மேன் தான்.











0 பின்னூட்டங்கள்